tamilnadu

img

பிரத்யேகக் கருவி தயாரிக்க மக்களவையில் வலியுறுத்துவோம் ஜோதிமணி எம்.பி.,பேச்சு

திருச்சி, அக்.26- ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறு வனை மீட்கும் பணியை நாடாளுமன்ற உறுப்பி னர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டார்.குழந்தை மீண்டு வர வேண்டும் என்ற பரித விப்போடு காத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஆறு தல் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தும் ஆழ் துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் நிலையில்தான் உள்ளோம்.கனத்த இதயத்தோடு அனைவரும் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். குழந்தையை மட்டும் மீட்டுக் கொடுங்கள். அது போதும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர். ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவனித்து வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் சிறுவர்களை மீட்க பிரத்யேகக் கருவி உரு வாக்க மக்களவையில் வலியுறுத்துவோம். சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறினார்.